யெகோவாவின் நாள்

28“அதன்பின்பு,

நான் எல்லா மக்கள்மேலும் என் ஆவியானவரைப் பொழிவேன்.

உங்கள் மகன்களும், மகள்களும் இறைவாக்கு உரைப்பார்கள்;

உங்கள் முதியவர்கள் கனவுகளையும்

உங்கள் இளைஞர் தரிசனங்களையும் காண்பார்கள்.

29மேலும் அந்நாட்களில் நான், எனது ஊழியக்காரர்கள்மேலும் ஊழியக்காரிகள்மேலும்

என் ஆவியைப் பொழிவேன்.

30வானத்திலும் பூமியிலும்

இரத்தமும் நெருப்பும் புகை மண்டலமுமாகிய

அதிசயங்களை நான் காண்பிப்பேன்.

31பெரிதும் பயங்கரமுமான யெகோவாவின் அந்த நாள் வருமுன்பே,

சூரியன் இருண்டுபோகும்,

சந்திரன் இரத்தமாக மாறும்.

32அப்போது யெகோவாவின் பெயரைச் சொல்லி கூப்பிடுகிற,

யாவரும் இரட்சிக்கப்படுவார்கள்;

யெகோவா சொன்னதுபோலவே,

மீந்திருப்பவர்கள் மத்தியிலிருந்து

யெகோவாவினால் அழைக்கப்பட்டவர்களுக்கு,

சீயோன் மலையிலும் எருசலேமிலும்

மீட்பு உண்டு.