சமாரியா, எருசலேமுக்கு எதிரான நியாயத்தீர்ப்பு,

3நோக்கிப்பாருங்கள்; யெகோவா தமது உறைவிடத்திலிருந்து வருகிறார்.

அவர் இறங்கி பூமியின் உயர்ந்த இடங்களில் உலாவுகிறார்.

4நெருப்பின் முன் மெழுகு போலவும்,

மலைச்சரிவில் பாய்ந்தோடும் தண்ணீர் போலவும்

மலைகள் அவருக்குக் கீழ் உருகுகின்றன.

பள்ளத்தாக்குகள் பிளக்கின்றன.

5யாக்கோபின் மீறுதல்களினாலும்,

இஸ்ரயேல் வீட்டாரின் பாவங்களினாலுமே இவை எல்லாம் நடக்கின்றன.

யாக்கோபின் மீறுதல் என்ன?

சமாரியா அல்லவா?

யூதாவின் வழிபாட்டு மேடை எது?

எருசலேம் அல்லவா?

6“எனவே யெகோவா சொல்கிறதாவது:

நான் சமாரியாவை ஒரு இடிபாட்டுக் குவியலாக்குவேன்.

திராட்சைத் தோட்ட நிலமாக அதை மாற்றுவேன்.

அவற்றின் கற்களை பள்ளத்தாக்கில் கொட்டி, அஸ்திபாரங்களை வெறுமையாக்குவேன்.

7சமாரியாவின் விக்கிரகங்கள் யாவும்

துண்டுகளாய் நொறுக்கப்படும்;

அவள் ஆலயத்திற்குக் கொடுத்த அன்பளிப்புகள் எல்லாம்

நெருப்பில் சுட்டெரிக்கப்படும்;

அவளுடைய உருவச்சிலைகள் அனைத்தையும் அழிப்பேன்.

அவள் தன் அன்பளிப்புகளை கோயில் வேசிகளின் கூலியிலிருந்து பெற்றபடியால்,

பகைவர்கள் அவற்றைத் திரும்பவும் வேசிகளின் கூலியாகவே பயன்படுத்துவார்கள்.”