Select a Verse
பில்தாத் பேசுதல்
1அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக சொன்னதாவது:
2“ஆளுகையும், பிரமிக்கத்தக்க பயமும் இறைவனுக்கே உரியது;
அவரே பரலோகத்தின் உயரங்களில் சமாதானத்தை நிலைநாட்டுகிறவர்.
3அவருடைய படைவீரர்களை எண்ணமுடியுமோ?
அவருடைய ஒளி யார்மேல் உதிக்காமல் இருக்கிறது?
4அப்படியிருக்க ஒரு மனிதன் இறைவனுக்கு முன்பாக நேர்மையானவனாக நிற்பதெப்படி?
பெண்ணிடத்தில் பிறந்தவன் தூய்மையாய் இருப்பதெப்படி?
5அவருடைய பார்வையில் சந்திரன் பிரகாசம் இல்லாமலும்,
நட்சத்திரங்கள் தூய்மையற்றதாயும் இருக்கும்போது,
6பூச்சியாயிருக்கும் மனிதனும், புழுவாயிருக்கும்
மனுமகனும் எவ்வளவு அற்பமானவர்கள்!”


